17.2 C
New York
Saturday, April 11, 2026

ஜனாதிபதி தேர்தலில் 40 பேர் போட்டி

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இன்று நணபகலுடன் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை முடிந்த நிலையில், இன்று காலையில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 4 பேர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் நாளை காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியும்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Related Articles

Latest Articles