சுவிட்சர்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முக அங்கீகாரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவுள்ளன.
பயணிகளைக் கையாளும் செயற்பாட்டில் பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது.
இதுதொடர்பாக, அரசாங்கம் விமானச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை ஆலோசனைக்காக சமர்ப்பித்துள்ளது.
பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்துவது பயணிகள் காகித டிக்கெட் அல்லது மின்னணு போர்டிங் பாஸ்களை வழங்க அனுமதிக்கும் என்று அரசாங்கம் எழுதியது.
பொதிகளை கொண்டு செல்வது, சோதனை, போர்டிங் பாஸ் கட்டுப்பாடு அல்லது விமானத்தில் ஏறும் போதான சோதனை போன்றவற்றுக்கு முக அங்கீகாரம் பயன்படுத்தப்படலாம்.
அதேவேளை, பயோமெட்ரிக் தரவு இல்லாத அதை நிராகரிக்கும் மக்களுக்கு மாற்றாக தற்போதைய செயல்முறை, வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்- Swissinfo