வீடுகளில் அல்லது ஓய்வு நேரங்களின் போது விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சனத்தொகை மாற்றங்கள் அதிகரித்து வரும் இத்தகைய விபத்துக்களின் எண்ணிக்கைக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
வயதாகும் போது, இத்தகைய விபத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக விபத்து தடுப்புக்கான சுவிஸ் கவுன்சில் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 1,700 பேர் கீழே விழுந்து இறக்கின்றனர்; கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 20 வீதம் அதிகரித்துள்ளது.
வீட்டில் மற்றும் ஓய்வு நேரங்களில் ஏற்படும் மரண விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 31 வீதம் அதிகரித்து, 2,100 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகைய விபத்துக்களில் இறப்பவர்களின் சராசரி வயது 82 ஆகும்.
அதேவேளை போக்குவரத்து அல்லது விளையாட்டு விபத்துக்களில் இறப்பவர்களின் சராசரி வயது 53 ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் விபத்துகளில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், 14 குழந்தைகள் வீட்டில் மற்றும் ஓய்வு நேரங்களில் விபத்துகளில் இறக்கின்றனர்.
மூலம் – Swissinfo