ஜெனிவா Thônex இல் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, விளையாட்டு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்ட குழந்தைகள் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஆறு குழந்தைகள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயம் அடைந்த சாரதியான மூதாட்டிசிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
சுமார் பத்து வயதுடைய குழந்தைகள் கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று விட்டு பானம் அருந்துவதற்காக விளையாட்டு அரங்கில் இருந்து வெளியே வந்து போதே அவர்கள் மீது கார் மோதியுள்ளது.
அவர்களில் நால்வர் படுகாயமடைந்தனர், இருவர் மிகவும் மோசமாகவும், மேலும் இருவர் சிறிதளவும் காயமடைந்து உள்ளனர். குழந்தைகளுடன் வந்த பெரியவர் ஒருவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டது.
நேற்றுக் காலை 10.19 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
காயமடைந்த அனைவரும் ஜெனிவா பல்கலைக்கழக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கார் தரிப்பிடத்திற்கு செல்ல முற்பட்ட போது அந்த பெண் தவறுதலாக Sous-Moulin விளையாட்டு மையத்திற்குள் நுழைந்துள்ளார்.
அவர் மிக வேகமாக ஓட்டினார் என்று ஜெனிவா சட்டமா அதிபர் அலுவலகம் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தது.
விளையாட்டு மையத்தின் நுழைவுக் கதவை உடைப்பதற்கு முன், ஓட்டுநர் எவ்வாறு தடையின் வழியாகச் சென்றார், சரிவுப் பாதையில் ஏறினார், ஒரு பாதசாரி கடவையைக் கடக்க முடிந்தது என்பன தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மூலம்- Swissinfo