Rorschach இல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
நேற்றுமுன்தினம் அதிகாலை 12.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக St. Gallen கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
ஏனைய நான்கு பேரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
ஏனையவர்கள் தீவிபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.
60 தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.