சமூக உதவியை நம்பியிருக்கும் Winterthur குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஒதுக்கீடு அதிகரித்துள்ளது
Winterthur இல் 2023 ஆம் ஆண்டில், 6,650 பேர் வருடத்திற்கு ஒரு முறையாவது சமூக உதவியைப் பெற்றனர். இது முந்தைய ஆண்டை விட 5.1 சதவீதம் குறைவாகும்.
தற்போது, சமூக உதவி பெறுகின்றவர்களின் வீதம். 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது 2013 க்குப் பிறகு மிகக் குறைந்த வீதமாகும்.
2023 இல் சமூக உதவி பெற்ற 954 பேரின் கணக்குகள் மூடப்படுகின்றனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களுக்கு இனி ஆதரவு தேவையில்லை, ஏனெனில் அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டது.
Winterthur நகரம் கடந்த ஆண்டு 91.7 மில்லியன் பிராங் நிதிய சமூக நலன்களுக்காக செலவிட்டது.
சமூக உதவி பெறும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், இதற்கான ஒதுக்கீடு 2022ஆம் ஆண்டை விட 5.6 மில்லியன் பிராங் அதிகமாகும்.
புகலிடப் பாதுகாப்புக்கான செலவு அதிகரித்துள்ளது.
உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, புகலிடக் கோரிக்கையாளரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், Winterthur நகரம் புகலிடப் பாதுகாப்பு கோரிய 1,228 பேருக்கு ஆதரவளித்தது. 2021ல் இந்த எண்ணிக்கை 377 ஆக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, புகலிடப் பாதுகாப்புக்கு 6 மில்லியன் பிராங்குகள் செலவாகும்.
இந்த ஆண்டு அகதிகளுக்கான தங்குமிடம் மற்றும் ஆதரவுக்கான செலவுகள் தொடர்ந்து உயரக்கூடும்.
ஏனெனில் Winterthur கூடுதல் அகதிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூலம்- zueritoday