Oerlikon Ost ரயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக சூரிச் நகர பொலிசார் தெரிவித்தனர்.
மருத்துவக் குழுவினரும் பொலிசாரும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். எனினும் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
விபத்தின் காரணமாக, Oerlikon Ost நிலையம் மற்றும் Seebach இடையே இரு திசைகளிலும் டிராம் லைன் 14 தற்காலிகமாக தடைபட்டது.
பிற்பகல் 3 மணிக்கு சற்று முன் மீண்டும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.
மூலம்- Zueritoday