Wallisellen இல் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் அடித்தளத்தில் நேற்று முன்தினம் மாலை தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துக் காரணமாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சுமார 20 பேர் அடுக்குமாடிக் கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் புகையை சுவாசித்ததால், பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.