ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார திசநாயக்க முன்னணியில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் ரணில் விக்கிரமசிங்கவும், மூன்றாமிடத்தில் அனுர குமார திசநாயக்கவும் உள்ளனர்.
இதுவரை வெளியான 11 மாவட்டங்களின் தபால் மூல வாக்கு முடிவுகளில், 10 மாவட்டங்களில் அனுரகுமார திசநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் மட்டும், சஜித் பிரேமதாச முன்னிலையில் இருக்கிறார்.
இதன்படி,
அனுரகுமார திசநாயக்க 154,657 வாக்குகள் (57.78%)
ரணில் விக்கிரமசிங்க 52,482 வாக்குகள்(19.61%)
சஜித் பிரேமதாச 48,970 வாக்குகள் (18.30%)
நாமல் ராஜபக்ச 4,821 வாக்குகள் (1.80%)
அரியநேத்திரன் 1,691 வாக்குகள் (0.6%) பெற்றுள்ளனர்.