23.9 C
New York
Thursday, June 26, 2025

அகதிகளின் குடும்ப ஒருங்கிணைப்புக்கு தடை- தேசிய கவுன்சிலில் தீர்மானம்.

சுவிஸ் தேசிய கவுன்சில் நேற்று புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தது.

பாதுகாப்பான மூன்றாவது நாட்டைக் கடந்து வந்தவர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெறுவதற்கான உரிமையைப் பெற வேண்டுமா, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கான குடும்ப மறு ஒருங்கிணைப்பு கட்டுப்படுத்தப்பட வேண்டுமா மற்றும் போக்குவரத்து பிராந்தியங்கள் உருவாக்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இதன் போது. பேசப்பட்டன.

இதன் போது உறுப்பினர்கள் பலர், குறிப்பாக SVP சேர்ந்த பெரும்பாலானோர், புகலிட அமைப்பை கடுமையாக்க அழைப்பு விடுத்தனர்.

SVP தேசிய கவுன்சிலர் ஆண்ட்ரியாஸ் கிளார்னர், போக்குவரத்து பிராந்தியங்களை உருவாக்குவதன் மூலம், இனி புகலிடக் கோரிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்று உறுதியாக நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கு குடும்ப மறு ஒருங்கிணைப்பை தடை செய்ய தேசிய கவுன்சில் முடிவு செய்தது.

தேசிய கவுன்சிலில் முன்வைக்கப்பட்பட்ட பிரேரணைகளின் மீது வாக்களிப்புகள் நடத்தப்பட்டன.

இதன்படி, பாதுகாப்பான மூன்றாவது நாட்டைக் கடந்து சென்ற நபர்களுக்கு புகலிட உரிமை இருக்கக்கூடாது என்ற பிரேரணை,  94 வாக்குகளுடன் நிராகரிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக 89 வாக்குகள் அளிக்கப்பட்டன. 2 பேர் வாக்களிக்கவில்லை.

தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு குடும்ப மறு இணைப்பு இல்லை என்ற தீர்மானம், 105 வாக்குகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அதற்கு எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன. 9  பேர் வாக்களிக்கவில்லை

அகதிகளுக்கான போக்குவரத்து மண்டலங்களை உருவாக்குதல் தொடர்பான பிரேரணை,  97 வாக்குகளுடன் நிராகரிக்கப்பட்டது. 90 பேர் அதனை ஆதரித்தனர் 2 பேர் வாக்களிக்கவில்லை

சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பற்றிய தரவு பரிமாற்றத்தை முறைப்படுத்துதல் குறித்த தீர்மானம், 119 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.  71 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.

Related Articles

Latest Articles