28.5 C
New York
Wednesday, August 12, 2026

வீட்டுக்குள் வளர்க்கப்பட்ட 1,300 கஞ்சா செடிகள்.

1,300க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை சூரிச் கன்டோனல் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

Flumserbergஇல் உள்ள வீடு ஒன்றில்  உள்ளக வசதியிலேயே  இந்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.

42 வயதான சுவிஸ் நபர் ஒருவர் இந்த கஞ்சா செய்கையை மேற்கொண்டதாக  சந்தேகிக்கப்படுகிறது.

அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சா தூளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக பொலிசார் குற்றவியல் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles