பாரிசுக்கு அருகே, ரயிலில் கோடரித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பாரிசுக்கு கிழக்கே 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள, RER station Ozoir-la-Ferrière இல் இன்று காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயர் வகுப்பு மாணவர்கள் போன்ற மிக இளம் வயதுடையவர்களே இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ரயிலில் ரயிலில் பயணம் செய்த அவர்கள், மத்தியில் மோதல் ஏற்பட்டதை அடுத்து கோடரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது ஒருவர் கோடரியால் வெட்டப்பட்டு தலை பிளந்து ஆபத்தான நிலையில் உள்ளார். இன்னொருவரின் கை வெட்டப்பட்டுள்ளது.
மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தினால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min