29.8 C
New York
Thursday, August 13, 2026

65 வீதம் வரையே வாக்களிப்பு- வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்துள்ளது.

அமைதியான முறையில் நடந்த இந்த வாக்களிப்பை அடுத்து வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, பிற்பகல் 4.15 மணியளவில் தபால்வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

இரவு 7.15 மணியளவில் ஏனைய வாக்குகள் எண்ணத் தொடங்கப்படும்.

முதலாவது தேர்தல் முடிவு 10 மணிக்கு எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் சராசரியாக 65 வீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக பதிவாகிய வாக்குகள்.

2024 பொதுத் தேர்தலுக்கான மாவட்ட அளவிலான வாக்குப்பதிவு மாலை 4.00 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடையும் போது பல மாவட்டங்களில் 65 சதவீதத்தை தாண்டியுள்ளது. இன்று (14) தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வாக்குப்பதிவு முடிந்த பிறகு பல மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு:

யாழ்ப்பாணம் – 69%

மன்னார் – 70%

திருகோணமலை – 67%

முல்லைத்தீவு – 63%

மட்டக்களப்பு – 61%

மாத்தறை – 64%

புத்தளம் – 56%

அனுராதபுரம் – 65%

பதுளை – 66%

கொழும்பு – 65%

நுவரெலியா – 68%

குருநாகல் – 64%

பொலன்னறுவை – 65%

இரத்தினபுரி – 65%

காலி – 64%

அம்பாந்தோட்டை – 60%

Related Articles

Latest Articles