21.3 C
New York
Thursday, June 18, 2026

தேசிய மக்கள் சக்திக்கு அசுரபலம்

இதுவரை வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதுவரை வெளியாகிய முடிவுகளில் ஓரிரு தொகுதிகள் தவிர ஏனையவற்றை முழுமையாக தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

தற்போதைய நிலவரத்தின்படி 5,731,132 வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி 52 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1,712,484 வாக்குகளுடன் 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 416,250 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன 290,840 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு இதுவரை 175,200 கிடைத்துள்ளதுடன் 1 ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles