Schwyz கன்டோனில் 9000 பேருக்கான தபால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றும் அங்கு தபால் விநியோகம் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவினால், அதிகாலையிலும் இரவிலும், பயணம் செய்ய முடியாத நிலை நீடிப்பதால், தபால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தபால்கள், பொதிகள், பத்திரிகைகள் பல நாட்களாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நிலைமை சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்- watson.ch