17.2 C
New York
Wednesday, September 10, 2025

சிவாஜிலிங்கத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்று பிணை வழங்கியது

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்று தலா 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார் என குற்றம் சாட்டி, சட்டமா அதிபரினால், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணைகளின் போது சிவாஜிலிங்கம் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தமையால் மன்றில் முன்னிலையாகவில்லை. அந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கும் மன்றில் முன்னிலையாகாத காரணத்தால் , அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

Related Articles

Latest Articles