26.5 C
New York
Thursday, September 11, 2025

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.

சூரிச்சில், 11 ஆவது, மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக  பொலிசார் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினரால் உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பத்து பேர் காயமின்றி வீட்டை விட்டு வெளியேற முடிந்தது.

மற்றொரு நபர் அவசர சேவை மற்றும் அவசர மருத்துவரிடம் இருந்து முதலுதவி பெற்ற பின்னர்,  புகையை சுவாசித்ததால்,  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடும் புகை மூட்டத்தால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles