Wallisellen அருகே, மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளாகிய மோசமான விபத்தை அடுத்து, A1 நெடுஞ்சாலை முற்றாக மூடப்பட்டது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு முன்னதாக, A1 நெடுஞ்சாலையில் பெர்ன்/பாசல் திசையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள், டியூபென்டார்ஃப் நுழைவாயிலில், மோதிக்கொண்டன.
கார்களில் ஒன்று வீதியின் குறுக்கே சறுக்கி, மையத் தடையைத் தாக்கி, பின்னர் பல பாதைகளில் பின்னால் வீசப்பட்டது.
இதனால், Winterthurஇல் இருந்து வந்த மூன்றாவது காருடன் மோதியது.
இந்த விபத்துக்களில் சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகினர்.
இரண்டு விபத்துகளாலும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.
சிதைவுகள் 100 மீட்டருக்கும் அதிகமாக பரவிக் கிடந்தன.
இதன் விளைவாக, Wallisellen நெடுஞ்சாலை வெளியேறும் இடத்திற்கும் சூரிச்-கிழக்கு சந்திப்புக்கும் இடையிலான வீதியை, சூரிச் மற்றும் பெர்ன் நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு நான்கு மணி நேரம் மூட வேண்டியிருந்தது.
மூலம்-20min.