Worb இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் அறையில் ஏற்பட்ட தீவிபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினர் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அவர்கள் அந்த வீட்டில் இருந்து, பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூலம்- bluewin

