Cham இல் உள்ள வானுயர்ந்த கட்டடம் ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக Zug பொலிசார் தெரிவித்தனர்.
வானுயர்ந்த கட்டடத்தின் மேலிருந்து இரண்டாவது தளமே தீப்பற்றி எரிந்தது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
அந்த கட்டடத்தில் இருந்த ஏனையவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களை இன்று வெளியிடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.