14.5 C
New York
Sunday, May 3, 2026

சூரிச்சிலும் இன்று பொலிஸ் நடவடிக்கை.

சூரிச்சின் Wetzikon பிரதேசத்தில் வீட்டு வன்முறை ஒன்றை அடுத்து பெரியளவிலான பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் வேறு இரண்டு பேரைத் தாக்கியதை அடுத்து இந்த பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு மோசமாக காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பொலிஸ் கார்கள், அம்புலன்ஸ்கள், மோப்பநாய் என்பனவும் இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டன.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles