பிளாட்டனில், செம்மறி ஆடு வளர்க்கும், டோனி எச் (64) புதன்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
பனிப்பாறை சரிவுக்குப் பின்னர், காணாமல் போயுள்ள அவர், உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போயுள்ளன.
டோனியின் ஆட்டுத் தொழுவம் முற்றிலுமாக சிதைவுகளில் முற்றிலுமாக புதையுண்டு போயுள்ளது.
அதனால், அவர் அந்த நேரத்தில் ஆடுகளுடன் இருந்திருக்கலாம், என அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.
அவரது பண்ணை வெளியேற்ற அறிவிப்பு விடுக்கப்பட்ட பகுதிக்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில், இருந்தது.
அதனால், டோனி பெரும்பாலும் எந்த அதிகாரப்பூர்வ உத்தரவுகளையும் புறக்கணிக்கவில்லை.
பனிப்பாறைச் சரிவு, அவருக்கும் அவரது 100 வெள்ளை ஆல்பைன் ஆடுகளுக்கும் ஒரு அபாயகரமான முடிவை ஏற்படுத்தியிருக்கிறது.
2011 ஆம் ஆண்டு, ஒரு வெள்ளத்தின் போது, லோன்சா நதி அதன் கரைகளில் பெருக்கெடுத்து ஓடியது. டோனியின் கொட்டகையின் அடித்தளத்தை அரித்தது, இதனால் கட்டடம் இடிந்து விழுந்தது.
அதன் பின்னரே, பிளாட்டன் நகராட்சியின் ஒரு பகுதியாக இருக்கும் டான்மட்டாவில் தனக்கும் தனது ஆடுகளுக்கும் ஒரு புதிய இடத்தை அவர் தேடிக் கொண்டார்.
அந்த நேரத்தில், இந்த நடவடிக்கை டோனியின் உயிரைப் பறிக்கும் என்பதை அவர் அறிந்திருக்க முடியாது.
மூலம்- 20min.