விந்தணு கொடையாளர் ஒருவர், எட்டு ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 67 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இதனால் ஒரு அரிய, புற்றுநோயை உண்டாக்கும் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களில் பத்து பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், விந்தணு தானம் செய்பவர் ஒருவர் எட்டு குழந்தைகளுக்கு மேல் தந்தையாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த விதி அடிக்கடி மீறப்பட்டுள்ளது என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.
55 விந்தணு கொடையாளர்கள் அனுமதிக்கப்பட்ட எட்டு குழந்தைகளை விட அதிகமான குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெரும்பான்மையானவர்கள் ஒன்பது முதல் 13 வரையான குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளனர். ஒரு கொடையாளர், 19 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார்.
இது 2001 மற்றும் 2011 க்கு இடையில் பிறந்த 500 முதல் 700 குழந்தைகளை பாதிக்கிறது.
இதனால் மத்திய அரசு விதிகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது
எந்த குடும்பங்களில் எத்தனை குழந்தைகளை யார் பெற்றெடுத்தார்கள் என்பதை மத்திய அரசு மட்டுமே அறியும்.
இருப்பினும், உச்ச வரம்பிற்கு இணங்குவதை கண்காணிக்க அதற்கு அதிகாரம் இல்லை.
எட்டு என்ற விதி எப்போதும் கடைபிடிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சுவிஸ் விதிமுறைகள் கூறுகின்றன.
மூலம்- 20min.