அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் மற்றுமொரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உமா சத்ய சாய் கட்டே என்ற தெலுங்கு மாணவர் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 14 உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் பல வகையில், இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.