பெர்னில் உள்ள கான்செலி வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஒரு நபரிடம் தனிப்பட்ட சோதனை நடத்தினர்.
தடுத்து நிறுத்தப்பட்ட நபர் ஆரம்பத்தில் சோதனைக்கு ஒத்துழைத்தார்.
அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது, அவர் ஆற்றங்கரைப் பாதைக்குச் செல்லும் படிக்கட்டுகளை நோக்கி தப்பியோடினார்.
அதிகாரிகள் அந்த நபரை துரத்திச் சென்ற போது, அவர் படிக்கட்டுகளில் விழுந்து காயமடைந்தார்.
அவசரகாலப் பணியாளர்கள் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நபர் சுவிட்சர்லாந்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்- 20min