-5.7 C
New York
Sunday, December 28, 2025

சூரிச் ஏரிக் கரையில் சடலம் மீட்பு.

ரிச்டர்ஸ்வில் அருகே சூரிச் ஏரியின் கரையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6:20 மணிக்குப் பின்னர், சடலத்தைக் கண்ட ஒரு வழிப்போக்கர் சூரிச் கன்டோனல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக ஒரு கடல்சார் பொலிஸ் படகு மற்றும் தரை ரோந்துப் படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

அவசரகாலப் பணியாளர்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த ஒருவரின் சடலத்தை கண்டனர்.

இறந்தவரின் அடையாளங்கள், மற்றும் சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள், இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles