1.8 C
New York
Sunday, March 29, 2026

இருவரைக் கத்தியால் குத்தி விட்டு கடையில் கொள்ளை.

டேவிட்ஸ்போடென்ஸ்ட்ராஸ் / சென் ஜோஹன்ஸ்-ரிங்கில் உள்ள ஒரு கடையில்  புதன்கிழமை மாலை, அடையாளம் தெரியாத ஒரு நபர், ஆயுதமுனையில் கொள்ளையடித்துள்ளார்.

இந்தக் கொள்ளை முயற்சியில் இரண்டு பேர் காயமடைந்ததாக பாஸல் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்தது.

அரசு வழக்கறிஞர் அலுவலகம் இதுவரை நடத்திய குற்றவியல் விசாரணையில், அடையாளம் தெரியாத ஒருவர் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்து நேரடியாக பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

கடை உரிமையாளருக்கும் அந்த அடையாளம் தெரியாத நபருக்கும் இடையே வன்முறை வாக்குவாதம் ஏற்பட்டது.

அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தி அந்த நபரைக் காயப்படுத்தினார். அவருக்கு உதவ வந்த ஒரு வழிப்போக்கரும் காயமடைந்தார்.

இறுதியில் குற்றவாளி கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியில் தெரியாத திசையில் தப்பிச் சென்றார். உடனடியாக தேடுதல்கள் நடத்தியும் இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட இருவரையும் பாஸல்-ஸ்டாட் மீட்பு சேவை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles