24.1 C
New York
Friday, July 10, 2026

சூரிச் தெருவிழாவில் 8 இலட்சம் பேர் திரண்டனர்!

சனிக்கிழமை நடைபெற்ற 32வது சூரிச் தெரு விழாவில், சூரிச் ஏரிப் படுகையைச் சுற்றி சுமார் 800,000 பேர்  திரண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மதியம் சூரிச் ஏரிப் படுகையில் 34 டிகிரி வெப்பநிலை இருந்தது. கூட்டம் நடனமாடும்போது அது இன்னும் வெப்பமடைந்தது.

உலகின் மிகப்பெரிய டெக்னோ பார்ட்டியில் சுமார் 800,000 பேர் கலந்து கொண்டனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சூழ்நிலை சிறப்பாகவும் அமைதியாகவும் இருந்தது, இரவு 9 மணி வரை குறிப்பிடத் தகுந்த சம்பவங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles