2.1 C
New York
Thursday, February 12, 2026

மலையேற்ற வீரர்களின் சடலங்கள் மீட்பு.

சுவிட்சர்லாந்தில் உள்ள வெய்ஸ்மிஸ் சிகரத்தில் இரண்டு மலையேறுபவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹெலிகொப்டர்கள் மூலம் நடத்தப்பட்ட நீண்ட தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டன.

பல நாட்களுக்கு முன்பு, இருவரில் ஒருவர் மலையிலிருந்து இறங்கும்போது விழுந்ததாக வலைஸ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஒரு மலையேற்ற வீரர் சுமார் 3,950 மீட்டர் உயரத்தில் விழுந்தார்.

விபத்தை நேரில் பார்த்த அவரது நண்பர் உடனடியாக மீட்பு சேவைகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பல விமானங்களை தேடுதலில் ஈடுபடுத்திய போதிலும், உடனடியாக  சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இரண்டு மலையேறுபவர்களும் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles