கோடை விடுமுறை காலத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் யூரோ விமான நிலையமான பாஸல்-மல்ஹவுஸைப் பயன்படுத்தியுள்ளனர்.
இது ஒரு புதிய சாதனை என்பதுடன், முந்தைய ஆண்டை விட 9% அதிகரிப்பாகும்.
ஓகஸ்ட் மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பயணித்து யூரோவிமான நிலையம் சாதனை படைத்தது.
ஓகஸ்ட் 8 ஆம் திகதி ஒரே நாளில்- இந்த விமான நிலையத்தின் ஊடாக, 36,802 பயணிகள் பயணம் செய்தனர். இது முன்னெப்போதையும் விட அதிகம் என்று திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

