யூரியில் காணாமல் போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி வரை வீடு திரும்பாத ஒருவர் காணாமல் போயுள்ளதாக யூரி கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அனுப்பப்பட்ட ரோந்துப் படையினர், குயெடிக் பகுதியில் உள்ள இசெந்தலெர்ஸ்ட்ராஸ் அருகே ஒருவரின் சடலத்தை கண்டனர்.
அது காணாமல் போன 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.
விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த நேரத்தில் இறந்த நபர் ஒரு ஸ்கூட்டரில் மலையேறிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
மூலம்- 20min.

