-3.3 C
New York
Sunday, December 28, 2025

நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து.

மத்திய நாடாளுமன்றக் கட்டிடத்தில் புதன்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.

காலை 7 மணிக்கு முன்னர், தீ விபத்து எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக பெர்னின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தீயணைப்புப் படையினரின் விரைந்து சென்று நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விரைவாக அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று மத்திய சட்டமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கவுன்சில் தலைவர் பியர்-அண்ட்ரே பேஜ் தெரிவித்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles