சுவிட்சர்லாந்திற்கான தனது தூதுவர் கியான் லோரென்சோ கொர்னாடோவை இத்தாலி திரும்ப அழைத்துள்ளது.
கிரான்ஸ் மொன்டானா தீவிபத்து தொடர்பாக, லு கொன்ஸ்டெல்லேஷன் பார் உரிமையாளரான ஜக் மொரெட்டியின் நிபந்தனைக்குட்பட்ட விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இத்தாலி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க தூதுவரை திருப்பி அழைத்துள்ள இத்தாலி அரசாங்கம் அவருடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
முன்னதாக கலந்தாலோசனைக்காக தூதுவர் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை என ரோம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பாதிக்கச் செய்துள்ளது.

