கிராபுண்டன் மாகாண அரசாங்கம், வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் திட்டம் அடங்கிய அரசியலமைப்பு திருத்த வரைவை கன்டோனல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
வாக்களிக்கும் வயது 16 என்பது கன்டோனல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பொருந்தும் என்று மாகாண அரசாங்கம் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் குடிமக்களுக்கும் கன்டோனல் மட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்கும்.
வெளிநாட்டில் வசிக்கும் 16 வயதுடையவர்களுக்கு உள்ளூர் விடயங்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்கலாமா வேண்டாமா என்பதை ஒவ்வொரு நகராட்சியும் முடிவு செய்யும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கிராபுண்டன் மாகாண நாடாளுமன்றம் அதன் ஏப்ரல் அமர்வின் போது இந்த திட்டத்தை விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தத்தை ஆதரித்தால், வாக்காளர்கள் செப்டம்பர் 27 ஆம் திகதி இறுதி முடிவை எடுப்பார்கள். புதுப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் 2027 இல் நடைமுறைக்கு வர உள்ளன.
மூலம்- swissinfo

