வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் ஃப்ரிக்கில் உள்ள தபால் நிலையத்தை ஆயுதம் ஏந்திய ஒருவர் கொள்ளையடித்தார். அவர் ஊழியர்களை ஆயுதம் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டார்.
குற்றவாளி பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் பணத்துடன் தப்பி ஓடிய நிலையில் பொலிசார் உடனடியாக தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு 46 வயது சுவிஸ் நபரை பொலிசார் கைது செய்தனர். அவர் ஒரு ஆயுதத்தையும் திருடப்பட்ட பொருட்களையும் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அதனையடுத்து 45 வயது சுவிஸ் பெண்ணும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மூலம்- 20min

