சென் காலனில் வெள்ளிக்கிழமை காலை அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயதான அந்த சுவிஸ் பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு சென் காலன் கன்டோனல் பொலிசாருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சென் காலனில் வசிக்கும் 28 வயது எரித்திரிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூலம்- bluewin

