கிரான்ஸ்-மொன்டானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்து சூரிச்சில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயது சுவிஸ் நபர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து புத்தாண்டு தினத்தன்று லு கொன்ஸ்டெல்லேஷன் பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக வலைஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து மேலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
வாலைஸ் மலை ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து சுவிட்சர்லாந்தின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான துயரங்களில் ஒன்றாகும்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தவிர, மேலும் 115 பேர் படுகாயமடைந்தனர்.
மூலம்- swissinfo

