சென் காலன் மாகாணத்தில் டோர்ஃப்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வெள்ளிக்கிழமை மாலை, ஆயுதமேந்திய ஒருவர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
குற்றவாளி ஒரு ஊழியரை துப்பாக்கியால் மிரட்டி பல நூறு சுவிஸ் பிராங்குகளை கொள்ளையடித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் அந்த நபர் வாட்வில் நோக்கி ஒரு காரில் தப்பிச் சென்றார். சென் காலன் மாகாண பொலிசார் உடனடியாக தேடுதலைத் தொடங்கி, சில நிமிடங்களுக்குப் பிறகு, எப்னாட்-கப்பலில் வாகனத்தை நிறுத்தினர்.
அதில் இருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 35 வயது கொசோவர் பெண், 28 வயது பிரேசிலிய ஆண் மற்றும் 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்கள் அடங்கியுள்ளனர்.
மூலம்- bluewin

