25.2 C
New York
Tuesday, March 31, 2026

பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்.

கிரான்ஸ்-மொன்டானா லீ கொன்ஸ்டெல்லேஷன் பார் உரிமையாளர்களான ஜக் மற்றும் ஜெசிகா மோரெட்டி ஆகியோரின் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களுக்கு, வலெய்ஸ், வௌட் மற்றும் ஜெனீவா மாகாணங்களின் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் மீது செய்யப்பட்ட வாய்மொழி மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நீதிக்கான நேரம் ஊடகங்களுக்கான நேரம் அல்ல என்பதையும், நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே வழக்கறிஞர்களின் நோக்கம் என்பதையும் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமையாகும்.

நீதி என்பது ஊடகங்களின் நீதியாகவோ அல்லது தனியார் நீதியின் நீதியாகவோ இருக்கக்கூடாது.

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles