லூசெர்ன் கார்னிவல் பிப்ரவரி 12 ஆம் திகதி வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில், இடம்பெற்ற சம்பவத்தில், ஒரு பெண் பொலிஸ் உள்ளிட்ட இரண்டு பொலிசார் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை மாலையில் பாசல்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த ஒருவர், கே.கே.எல் பகுதியில் பலரை துன்புறுத்தியதாகவும், பலரை அச்சுறுத்தியதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் சோதனை செய்த பொலிசார், மொராக்கோவைச் சேர்ந்த 27 வயது நபரைக் கைது செய்ய முயன்ற போது அவர் வன்முறையுடன் எதிர்த்தார்.
அங்கிருந்த பலர் அதிகாரிகளை தாக்கினர். இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் பொலிஸ் உள்ளிட்ட இரண்டு பொலிசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
27 வயது பெண் மற்றும் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
மூலம்-20min

