வலைஸின் கோபன்ஸ்டீன் அருகே ஏற்பட்ட பனிச்சரிவினால், ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் சேவைகளை மீளத் தொடங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்றுக்காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் காரணமாக, கோபன்ஸ்டீன் மற்றும் பிரிக் இடையேயான ரயில் பாதை சனிக்கிழமை காலை வரை மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் மாற்று பேருந்துகளுக்கு மாற வேண்டும். லோட்சென்டல் பிராந்திய பாதுகாப்பு சேவையும் கோபன்ஸ்டீன் மற்றும் கேம்பல்-ஸ்டெக் இடையேயான வீதியை மூடியுள்ளது.
மூலம்- bluewin

