ஈரானில் நடக்கும் மோதலால் சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன. ஒரு லிட்டர் டீசலின் விலை 22% உயர்ந்து 2.13 பிராங் ஆக உள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் விலை நிலவரங்களைக் கண்காணித்த டூரிங் கிளப் சுவிஸ் (TCS) அமைப்பு, அன்லெட்டட் 95 பெட்ரோல் விலை 11% உயர்ந்து 1.82 பிராங் ஆகவும், அன்லெட்டட் 98 பெட்ரோல் விலை 10% உயர்ந்து 1.77-பிராங்கில் இருந்து 1.95 பிராங் ஆகவும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல் காரணமாக சுவிட்சர்லாந்து ஒரு பெரும் எரிசக்தி செலவை எதிர்கொள்கிறது.
ஒரு ஆய்வாளரின் கூற்றுப்படி, இந்த கூடுதல் எரிசக்தி செலவுகள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் பிராங் வரை இருக்கலாம்.
மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய் விலைகளில் ஏற்படும் உயர்வால், சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் பிராங் கூடுதல் எரிசக்தி செலவுகள் ஏற்படக்கூடும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவித்தார்.
சுவிஸ் கூட்டாட்சி தொழில்நுட்ப நிறுவனமான ETH சூரிச்சின் ஆய்வாளர் சிரில் புரூனரின் இந்த மதிப்பீடு, பெட்ரோல், டீசல், வெப்பமூட்டும் எண்ணெய், மண்ணெண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மார்ச் 23 ஆம் திகதி நிலவரத்திலேயே ஒரு முழு ஆண்டுக்கு நீடிக்கும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
சராசரியாக, இது ஒரு குடும்பத்திற்கு 1,200 பிராங் ஆக இருக்கும் என்று புரூனர் மதிப்பிடுகிறார்.

