இத்தாலிய தூதுவர் ஜியான் லொரென்சோ கொர்னாடோ சுவிட்சர்லாந்துக்குத் திரும்புகிறார். வாலேயில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இத்தாலிய அரசாங்கத்திற்கும் இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி இந்த முடிவை எடுத்துள்ளார்.
தூதுவர் கொர்னாடோவின் வருகையை சுவிஸ் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது. அவர் ஈஸ்டர் திங்கட்கிழமை பெர்ன் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து குறித்த விசாரணைக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்த, இத்தாலி ஜனவரி 24 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் இருந்து தனது தூதுவரைத் திரும்ப அழைத்திருந்தது.
ரோமில் உள்ள பலாஸ்ஸோ சிகியில் நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, தூதுவர் கொர்னாடோவை பெர்னுக்குத் திருப்பி அனுப்பும் முடிவுக்கு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஒப்புதல் அளித்ததாக அன்சா செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.
கிரான்ஸ்-மொன்டானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெர்னில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மூலம்-swissinfo

