2.5 C
New York
Thursday, April 9, 2026

ஆரம்பப் பாடசாலை நுழைவுத் தேர்வுகளை ஒழிக்க வேண்டும்.

ஆரம்பப் பாடசாலை நுழைவுத் தேர்வுகளை ஒழித்து, பாடசாலை அமைப்பில் தாமதமான, தேர்வு இல்லாத மாணவர் சேர்க்கை முறையைக் கொண்டுவர வேண்டும் என பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தோமஸ் மிண்டர், வலியுறுத்தியுள்ளார்.

முன்கூட்டிய மாணவர் சேர்க்கை சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது, அதனால்தான் பன்முகத்தன்மை கொண்ட வகுப்புகளுக்கும் தாமதமான முடிவுகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீண்ட மற்றும் அதிக சவாலான ஆசிரியர் பயிற்சித் திட்டத்தைக் கோரும் மிண்டர், அதற்கு அரசியல் மற்றும் நிதித் தடைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles