சூரிச்சின் ஹோம்ப்ரெக்டிகோனில் உள்ள குதிரையேற்றப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் எட்டு பேர் சிறு காயங்களுடன் தப்பினர்.
விலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று சூரிச் மாகாண காவல்துறை X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
73 வயது முதியவர் மற்றும் 84 வயது மூதாட்டி படுகாயம் அடைந்து, மீட்பு ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மாலை 6:30 மணிக்கு பின்னர், தீ விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசர சேவைகள் வருவதற்குள், கட்டிடத்தில் இருந்த அனைவரும் தாங்களாகவே வெளியேறிவிட்டனர்.
சிறு காயங்களுடன் இருந்த இருவர் மேலதிக பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாகாண காவல்துறை தெரிவித்தபடி, ஆறு பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர்.
தீயணைப்புப் படையினர் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், வீடு மற்றும் அதனுடன் இணைந்த கொட்டகைக்கு பத்து லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் சேதம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மாகாண காவல்துறை விசாரித்து வருகிறது.
மூலம்-bluewin

