சுவிஸ் மக்கள் அதிகளவில் முட்டைகளை உட்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், சில காலமாக அதனால் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
எனவே, மத்திய அரசு முட்டை இறக்குமதிக்கான சுங்க வரி ஒதுக்கீட்டை 15,000 தொன் அளவுக்கு உயர்த்துகிறது.
இதன் மூலம், இந்த ஆண்டு மொத்தமாக 36,000 தொன் முட்டைகள் குறைந்த சுங்க வரி வீதத்தில் இறக்குமதி செய்யப்படலாம். இது சுமார் 576 மில்லியன் முட்டைகளுக்குச் சமமாகும்.
மத்திய சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலகம் (BAZG), இறக்குமதிக்கான முதல் கட்டமாக 9,750 தொன் முட்டைகளை மே 1 ஆம் திகதி வெளியிடும். இரண்டாவது கட்டமாக, 5,250 தொன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும்.
மேலும், மே மாதம் முதல், மத்திய அரசு உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான சுங்க வரி ஒதுக்கீட்டை 10,000 தொன் அளவுக்கு உயர்த்தும். இருப்பினும், இந்த உயர்வு தற்காலிகமானதாகவே கருதப்படுகிறது.
மூலம்- 20min

