எம்பிராச்சில் உள்ள கூட்டாட்சி புகலிட மையத்தில், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயம் அடைந்தார்.
கினியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞனுக்கு கால்களிலும் முதுகிலும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவரது காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாகாண காவல்துறை அதிகாரிகள் பல ஆண்களைக் கைது செய்தனர்.
சூரிச் மாகாண காவல்துறையின் முதற்கட்ட கண்டுபிடிப்புகளின்படி, கைது செய்யப்பட்டவர்களில் மூவர், ஹார்ட்ஹோஃப்ஸ்ட்ராஸ் தெருவில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தின் போது, பாதிக்கப்பட்டவரை கூர்மையான ஆயுதம் மற்றும் ஒரு கனமான பொருளைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
சூரிச் தடயவியல் நிறுவனம் (FOR), குற்ற நடந்த இடத்திலிருந்தும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்தும் ஆதாரங்களைப் பெற்றது.
முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களான, 25 வயது மற்றும் 33 வயதுடைய துனிசியர்களும், 40 வயதுடைய அல்ஜீரியரும், சூரிச் மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மூலம்- 20min.

