கொலம்பியாவின் சாண்டா மரியாவில் நடைபெற்ற, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கான முதல் மாநாட்டில் சுவிட்சர்லாந்தும் பங்கேற்றுள்ளது. இந்த மாநாட்டில் 57 நாடுகள் பங்குபற்றியுள்ளன.
புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாகக் கைவிடுவதற்கான உறுதியான உத்திகளை நோக்கிய நகர்வுகளை சுவிஸ் அரசாங்கம் பாராட்டியது.
இதில் பங்கேற்பதன் மூலம், பாரிஸ் காலநிலை இலக்குகளுக்குத் தான் தீவிரமாக உறுதியுடன் இருப்பதாக சுவிட்சர்லாந்து காட்டியுள்ளது என கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகம் (FOEN) வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த இலக்குகளை அடைவதற்காக, சுவிட்சர்லாந்து தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளது.
எனவே, கொலம்பியா மற்றும் நெதர்லாந்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டு நாள் மாநாட்டின் முக்கிய நோக்கம், புதிய காலநிலை இலக்குகளைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருக்கவில்லை.
மாறாக, ஏற்கனவே உள்ள உறுதிமொழிகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் காண்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மூலம்- swissinfo

