கிளாரஸ் மாகாணத்தின் நேஃபெல்ஸ் நகரில் உள்ள நெட்ஸ்டால் இயந்திரத் தொழிற்சாலையில் சனிக்கிழமை மதியம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையின் கூரையில் தீப்பிடித்ததோடு, ஒரு சிறிய வெடிப்பும் நிகழ்ந்தது. தற்போதைய தகவல்களின்படி, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நேற்று மதியம் 1:40 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, தொழிற்சாலைக் கட்டிடத்தின் கூரை ஏற்கனவே முழுவதுமாகத் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது .
தொழிற்சாலைக் கட்டிடத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டது.
தீயை அணைக்கவும், அது சுற்றியுள்ள கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுக்கவும் 100-க்கும் மேற்பட்ட அவசரகாலப் பணியாளர்கள் பல மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 7 மணிக்குச் சற்று முன்பு வரை அவசரகாலக் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
மூலம்- bluewin

