29.8 C
New York
Thursday, August 13, 2026

வடக்கு ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி.

வடக்கு ஜெர்மனியின் ஸ்டட் நகரில் உள்ள “இளைஞர் நல மையத்தில்” நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் பெரியவர்கள் என்று ஜெர்மன் ஊடகங்களும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹம்பர்க்கிற்கு மேற்கே இன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பலரும் காயமடைந்தனர். பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என்று காவல்துறை பின்னர் தெரிவித்தது.

குற்றவாளியின் சாத்தியமான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை.

அப்பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியது.

Related Articles

Latest Articles